Wednesday, March 25, 2009

Earth Hour 2009

The planet we live in this universe is the only planet,atleast for now,which can support complex and complicated life systems.And we six sensed human beings have already destroyed its natural resources and now worrying about the way the globe is warming and hence the changes in the climate.We already ensured that we will not allow our future generations to enjoy this planet.Thanks to the human habitats.
Despite all these, few environmentalists who are studying the way the planet is changing its environment are crying and appealing to people to help the planet to survive.One such action is Earth Hour 2009.Please check the below link to know more about it(Please spare some time to read and understand what it is.If you are so busy that you could not even read the content...then **** off).Try to join it...Save Earth(Of course you dont have rights to destroy it...But stop exploiting it)
Link - www.earthhour.org

Thursday, March 19, 2009

நான் கடவுள் - கருத்துப் பதிவு

இந்த திரைப்படம் பற்றிய எனது கருத்துகளை பதிவு செய்வதற்கு முன்,பாலாவோடு எனக்குள்ள உறவையும்,அவரது படைப்புகளோடு எனக்குள்ள இனக்கத்தையும்,இந்த திரைப்படத்தைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளையும் நீட்டி முழக்காமல் சொல்லி விடுவது என விரும்புகிறேன்.
முதலில் பாலா
இவரோடு எனக்குள்ள உறவு,உணர்வுகளின் வழியே பிண்ணப்பட்ட ஒன்று.ஏகலைவன் துரோணரிடம் முகம் பார்க்காமல் பயின்றது போல்,என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் அவருடைய படைப்புகளில் விடை தேடிக் கொள்கிறேன்.இவரைப் பற்றியும்,இவரோடு எனது உணர்வுகளையும் தனியாகப் பதிவு செய்ய விழைகிறேன்.So Iam stopping it here.
அடுத்து நான் கடவுள் மீது எனது எதிர்பார்ப்பு
அஹம் ப்ரமாஸ்மி-நான் கடவுள் என்பது இந்து சனாதான தர்மத்தின் அடிப்படை மூலம்.4 வேதங்களும்,12 உபநிடதங்களும் இந்த கூற்றை நேரிடையாகவும்,கீதை மறைமுகமாகவும் அறிவிக்கின்றன.கோயில்களும்,பல கடவுள்களும் வெறும் தியானத்திற்காகவே அன்றி அவை அனைத்தும் வெறும் கற்பனை உருவங்களே.
"உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரம்மென் றேமறை
கூவுதல் கேளீரோ?"
என்றும்,இன்னும் பல் வேறு பக்திப் பாடல்களிலும் ஆன்மாவைக் கடவுளாக(அதன் மூலம் ஒவ்வொரு தனி உயிரும் கடவுளாகின்றன)அறிவித்து ஓய்ந்து போனான் பாரதி.பாரதியைப் பற்றியும்,அவனது தத்துவ,ஆன்மீக அறிவைப் பற்றி மற்றொரு நாள் எழுத எத்தனிக்கிறேன்.ஆக,கடவுளைப் பற்றிய எனது கேள்விகளுக்கு விடை தரும் என்ற நம்பிக்கை இப்படத்தின் மேல் எனது ஆர்வத்தை தூண்டி இருந்தது.தற்செயலாகவோ,எப்படியோ எனது வாழ்வில் என்னை யோசிக்கத் தூண்டிய "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே"(பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்த ரமண மாலை.இந்த பாடலின் வரிகளைக் கேட்டு என் உணர்வுகள் எல்லைகளைத் தாண்டி இருக்கின்றன)என்ற பாடல் இந்தப் படத்தில் இடம் பெறுவது தெரிந்து மிகுந்த ஆர்வம் உற்றேன்.மேலும் சித்தர்கள் மீதும் அவர்கள் கருத்துகள் மீதும் அளவு கடந்த அபிமானம் எனக்கு உண்டு.இப்படத்தைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளுக்கான காரணங்களை இதற்கு மேல் விவரிக்க வேண்டாம் என முடிவு செய்து இத்தோடு முடிக்கிறேன்.இனி,படத்தைப் பற்றி..........
நான் கற்பனை செய்து வைத்திருந்த கேள்விகளுக்கு ஒவ்வாமல் இருந்த போதும்,படைப்பளியாக பாலா ஒரு அரிய இடத்தை,வாழ்க்கையின் விளிம்பை,அதன் குரூரத்தை,அதன் ஆனந்ததை எனப் பலவிதமாக பரிமானித்துக் காட்டி இருக்கிறார்.நிதர்சனமான உண்மைகளை இயல்பாக காட்டிய விதம் பலருக்கு அருவருப்பையும்,சிலருக்கு அதிசயத்தையும் கொடுத்துள்ளது.வெகு சில பலஹீனமானவர்களுக்கு ஆர்யாவின் தோற்றம்,பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கைத் துயரம் படத்தைப் பார்க்க முடியாத உணர்வை கொடுத்துள்ளது."Dark Reality" என்று கூறப்படுகிற வன்முறையான் உண்மைகளை களமாக வைத்து படைப்புகளை படைக்கும் இயக்குனர்கள் உலகில் மிகக் குறைவே.அகிரா குரோசோசவாவின் படைப்புகளில் இருக்கும் அழுத்ததை பாலா கொடுக்க முனைந்திருக்கிறார்.வெற்றியும் பெற்றிருக்கிறார்.
சில எழுத்தாளர்கள் இப்படத்தை கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர்.பலர் பதிவு செய்ய மறுக்கும் விஷயங்களை பதிவு செய்வதாலேயே ஒரு படைப்பு சிறந்த படைப்பாகாது என்பதும்,இந்த படம் just romanticizes poverty என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.ஆனால் என் கருத்து - Slumdog Millionare romanticizes and exploits poverty whereas Naan Kadavul does not do that......
இந்த படம் ஒரு ஆன்மீகப் படமல்ல.ஆன்மீகத்தையும் கடவுளையும் தேடுகிற படம்.வாழ்வு,பிறப்பு,இறப்பு என்ற அடிப்படை தத்துவங்களை ஆராய முயல்கிற படம்.அழுகை,மகிழ்ச்சி,கோபம்,பசி என்ற மனித உணர்வுகளை ஆழச் சென்று பார்க்கின்ற முயற்சி.கை,கால்,கண்,வாய்,முகம் என்ற மனித உறுப்புகளின் வேறுபட்ட தன்மைகளை பதிவு செய்கின்ற முயற்சி.வாழ்க்கையின் இரு விளிம்புகளில் வாழும் மனிதர்களை ஒன்று சேர்க்கின்ற முயற்சி.கடவுளைப் பற்றியும் அதன் தன்மைகளைப் பற்றியும் சொல்கின்ற படம்.மரணத்தின் புனிதத்தையும் அதன் அசிங்கத்தையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த படைப்பாளியின் படைப்பு.
திரைக்கதை என்று பொறுத்த வரை,பாலா தனது முந்தைய படைப்புகளின் உத்தியையே கையாண்டிருக்கிறார்.சிறு வயதிலேயே ஒருவனை சமூக வாழ்க்கையில் இருந்து பிரித்து,அவனுக்கு கிடைக்க வேண்டிய உறவுகளின் உணர்வுகளை மறுத்து,பிறகு காலம் கழித்து அவனை சமூகத்தில் சேர்த்து விட்டு அவன் பார்வையில் கதையை நகர்த்தும் பாணியை மாற்றாமல் கடைபிடித்திருக்கிறார்.நந்தாவில் சூர்யாவை சிறுவர் சிறைச்சாலையிலும்,பிதாமகனில் விக்ரமை மயானத்திலும் விட்டவர்,நான் கடவுளில் ஆர்யாவை காசியில் வளர விடுகிறார்.அதன் மூலம் ஆர்யாவை சமூக வாழ்வில் இருந்து பிரித்து விடுகிறார்.அகோரியாக வளரும் ஆர்யாவின் மூலம் காசியின் மற்றொரு பரிமானத்தை எடுத்துரைக்கிறார்.பின்பு ஆர்யாவை சராசரி மனித வாழ்வில் புகுத்தி வாழ்வின் நிதர்சனத்தை படம் பிடித்திருக்கிறார்.
இசையில் இளையராஜா காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.காசியின் பிண்ணணியில் ஒலிக்கும் குனாலின் "மா கங்கா காசி பதாரி" மனதைப் பிசைகிறது(இந்தப் பாடல் இளையராஜாவின் பாடல் அல்ல.இது ஒரு பஜன்).ஆனால் அதன் பின்னர் வரும் 'ஓம் சிவோஹம்" நாடி நரம்புகளில் உக்கிரத்தை ஏற்றுகிறது.மற்ற பாடல்களிலும்,பிண்ணணி இசையிலும் இளையராஜா காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.மேலும் மிகுந்த சிரத்தை கொள்ளாமல் தனது பழைய "மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்"பாடலை பதிவு செய்திருக்கிறார்.பிண்ணணி இசையிலும் தனது இசை ஞானத்தை தெளிவு படுத்தியிருக்கிறார்.சங்கு,உடுக்கை என மிரட்டியிருக்கிறார்.
"புளுத்தினான்..தேவடியா மகன்.."என்று கடவுளை சாடும் வசனத்தில் கடவுளின் மேல் எளியவர்களுக்கு ஏற்படும் கோபத்தை பதிவு செய்த ஜெயமோகன்,"நெருப்புக்கு ஏதுடா சுத்தம் அசுத்தம்","தோமைன்னா என்னன்னு தெரியுமில்லடி","வாய் திறக்காத,கண் பார்க்காத சாமி என்னடா சாமி","அம்பானி செல்பேன் விக்கறவண்டா" என்ற வசனங்களில் தனது இலக்கிய அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார் .மற்ற படங்களில் தானே வசனம் எழுதிய பாலா இந்த படத்தில் ஜெயமோகனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.அதை ஜெயமோகனும் செவ்வனே செய்திருக்கிறார்(ஜெயமோகனின் ஏழாம் உலகத்தின் தழுவலே நான் கடவுள்).படத்தின் இறுதிக் காட்சிகளில் பூஜாவின் வசனங்கள் கடவுளை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
ஆர்யா,பூஜா மற்றும் அனைத்து கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக இயல்பாக படைக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தத்தில் இந்த படம் என் மன உணர்வுகளின் ஆழம் சென்று என்னை அசைத்துப் பார்த்து விட்டன.எங்கள் ஊரில்,நான் வசித்த தெருவில் நகை செய்யும் ஆசாரிகள் அதிகம்.அவர்கள் குப்பை என்று சாக்கடையில் வீசும் குப்பைகளை களைந்து அதில் கிடைக்கும் குண்டுமணி தங்கங்களை நம்பி பல குடும்பங்கள் எங்கள் தெருவில் வசித்து வந்தன.அவர்களுக்கென்று தனி வீடோ வாசலோ கிடையாது.அவர்கள் பிச்சை எடுத்தே வாழ்ந்தனர்.ஒரு நாள்(நினைவு தெரிந்து அப்போது நான் 11-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்)நான் பள்ளி சென்று கொண்டிருந்த போது அந்த குடும்பத்தை சேர்ந்த மனிதன் ஒருவன் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்த தோசை ஒன்றை ஊதி தின்று கொண்டிருந்தான்.வாழ்க்கையைப் பற்றிய எனது எண்ணங்களை மாற்றிப் போட்ட சம்பவம் அது.அப்பொழுது அம்மனிதனுக்காக பரிதாபப்பட்ட நான்,இப்பொழுது அவன் எறும்பகளின் உணவை பறித்துக் கொண்டான் எனவே எண்ணுகிறேன்.நாம் அனைவரும் அடுத்தவரின் உணவை பறித்தே வாழ்கிறோம் என எண்ணுகிறேன்.நம் அனைவரின் வாழ்க்கையையும் "தாண்டவன்" கதாபாத்திரத்தின் மூலம் பாலா செதுக்கியிருக்கிறார்.
மொத்ததில் "நான் கடவுள்" திரைப்படத்தை,அதன் ஆக்கத்தை 1994-ல் புலிட்சர் விருது பெற்ற ஒரு புகைப்படத்டோடு ஒப்பிட விரும்புகிறேன்.
புகைப்படம்

பசியின் எல்லை தாண்டிய கோரத்தில் இருக்கும் ஒரு குழந்தையை அது இறந்து விடும் என எண்ணி தன் உணவாகக் கொள்ள காத்திருக்கிறது ஒரு கழுகு.அந்த குழந்தையைக் காப்பாற்ற முயலாமல் அக்காட்சியை படம் பிடித்துருக்கிறார் ஒரு புகைப்படக்காரர்.நாமெல்லாம் அந்த கழுகாகவும்(தாண்டவன்),அந்த குழந்தை நாம் தினமும் காணும் பிச்சைக்காரர்களாகவும்(பூஜா),இந்த காட்சியை கண்டும் அதை தவிர்க்காத புகைப்படக்காரராக கடவுள்(ஆர்யா) என பாலாவின் வாழ்க்கை விவரிப்பு ஒவ்வொரு மனிதனின் செவிட்டில் அறைந்தது போல இருக்கிறது.
இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி எழுத என்னால் முடியவில்லை....I am sorry...I have no words

Wednesday, March 18, 2009

ஓம் சிவோஹம் - நான் கடவுள் பாடல் தமிழாக்கம்

இந்த பாடல் வெளியிடப்பட்ட நாள் முதலே இதனை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள்ளே தோன்றிய போதும்,சமஸ்கிருதம் முறையாக பயிலாத காரணத்தாலும்,என்னுடைய சோம்பல் மிகுதியாலும்,இந்த வேலையை முடிக்காமாலே கழித்து கடத்தி விட்டேன்.ஆனால் இப்போது அதன் முக்கியத்தன்மையை உணர்ந்து இந்த மொழியாக்கத்தைப் பதிவு செய்கிறேன்.
மொழியாக்கம் செய்யப்படும் எந்த பாடலும்,கட்டுரையும் முறையாக அந்த மொழியைப் பயிலாதவர்கள் செய்யும் போது,அந்த மொழியாக்கத்தை உண்மையான படைப்பின் அர்த்தமாகவோ,பிரதியாகவோ எடுத்துக் கொள்ள கூடாது.இந்த மொழியாக்கமும் அவ்வகையே.நேரடியான அர்த்தமாக கொள்லாமல்,ஒரு புரிதலாக கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி - கிரிராஜன்(இம்மொழியாக்கதிற்கு உதவியவர்)
பாடல்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம்
பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய ப்ரஹ்மாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹ
ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம்-அஹம்(நான்)சிவன்,ஓம்-அஹம்(நான்) சிவன்;ருத்ர நாமத்தை ஜபிக்கிறேன்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரகா
வீர பத்ரனே;அக்னி நேத்ரனே(கண்களில் நெருப்பைத் தெரிப்பவனே);கோர சம்ஹாரனே(கோரமாக அழிப்பவனே)

சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சகல லோகாமானவனே;சர்வ பூதங்களானவனே;சத்தியத்தின் உருவமே

சம்போ சம்போ சங்கரா
சாம்பு - சிவனின் ஒரு பெயர்;சங்கரா-சம்+கரா(சம்-நன்மை;கரா-செய்பவன்)
சிவனே சிவனே நன்மை செய்பவன் என்று பொருள் கொள்க

ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ

ருத்ர மந்திரங்கள்

அண்ட ப்ரமாண்ட கோடி அகில பரிபாலனா
ப்ரமாண்டமான கோடி அண்டங்களையும் அகிலம் அனைத்தையும் ஆள்பவனே

பூரணா ஜகத் காரணா சத்ய தேவ தேவப் ப்ரியா
முழுமையானவனே;இந்த ஜகத்தை தோற்றுவித்தவனே;சத்திய தேவர்களின் ப்ரியமானவனே

வேத வேதார்த்த சாரா யஞ்ன யஞ்னோமயா
வேதங்களின் சாரமே;அடைக்கலத்திற்கு இருப்பிடமே

நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சம்ரக்ஷனா
அசைக்க முடியாதவனே;துஷ்டர்களை அழிப்பவனே;அனைத்து உலகங்களையும் காப்பவனே

சோம சூர்ய அக்னி லோச்சனா ஸ்வேத ரிஷப வாகனா
சூரியன்,நிலா,அக்னி என முக்கண்களை உடையவனே;ரிஷப வாகனனே

சூல பானி புஜங்க பூஷனா திரிபுர நாஷ நர்த்தனா
சூலமும் நாகமும் கொண்டவனே;மூன்று கோட்டைகளைக் கொண்ட அரக்கர்களை அழித்து நடணம் புரிந்தவனே

யோமகேச மஹாசேன ஜனகா பஞ்ச வக்ர பரசு ஹஸ்த நமஹா
வானத்தை(நாம் கண்களால் காணும் வானம் அல்ல.Space) கேசமாக,மஹா சேனையின்,புலன்களின் தலைவனாக விளங்குபவனே.ஐந்து முகங்களும்,பரசு ஆயுதத்தையும் கொண்டவனே....வணங்குகிறேன்

ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

காலத் த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
முககாலத்தையும் அறிந்தவனே;மூன்று கண்கள் கொண்டவனே;மூன்று முனைகள் உடைய சூலத்தை கொண்டவனே

சத்ய ப்ரபாவ திவ்யப் பிரகாச மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
உண்மையின் வடிவமே;மாசற்ற ஒளியானவனே;மந்திரங்களின் ஸ்வரூபமே

நிஷ்ப்ர பஞ்சாதி நிஷ்க லங்கோஹம் நிஜ பூர்ண போத ஹம் ஹம்
கூட்டல்,கழித்தல் என குறைவுக்கும்,மாற்றத்திற்கும் அப்பாற்பட்டவனே;அசுத்ததிற்கு அப்பாற்பட்டவனே;பூரணமாய் நிறைந்திருப்பவனே

கத்ய காத்மாகம் நித்ய ப்ரம்ஹோகம் ஸ்வப்ன காசோகம் ஹம் ஹம்
சரண் அடைய வேண்டிய கடவுளே;நித்தியமான ப்ரம்ஹனே;கனவுகளில் நிறைந்திருப்பவனே

சச்சித் ப்ரமானம் ஓம் ஓம் மூல ப்ரமேக்யம் ஓம் ஓம்
உடலின் உண்மையே;அறிவின் பொருளே

அயம் ப்ரமாஸ்மி ஓம் ஓம் அஹம் ப்ரமாஸ்மி ஓம் ஓம்
ஆன்மா ப்ரம்ஹன்;நான் ப்ரம்ஹன்

கண கண கண கண கண கண கண கண சஹஸ்ர கந்த சப்த விஹரதி
ஆயிரம் மணிகளின் ஒலியில் இருப்பவனே

டம டம டம டம டம டம டம டம சிவ தமருக நாத விஹரதி
உடுக்கைகளின் நாத ஒலியில் விளங்குபவனே

ஓம் சிவோஹாம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

Saturday, March 14, 2009

மரணமே நின்னை காதல் கொள்வேன்


“மரணம்” - இந்த வார்த்தை எந்த நிலையில் இருக்கும் மனிதனையும் ஒரு வினாடியேனும் நிலை பிறழ செய்யும்.அதன் ஆளுமை மனித அறிவிக்கு அகப்படாமல் அவனை நகையாடித் திரியும் தன்மையைக் கொண்டது.பூமிக்கு அப்பாலும் தன் அறிவினை செலுத்தி அண்டங்களின் புதிர்களை எதிர்த்து நிற்கும் மனிதனின் ஒரே எஜமானன் மரணம் மட்டுமே.ஒரு சிறு பிள்ளையின் கையில் இருக்கும் விளையாட்டு பொம்மையை ஒத்தே மனிதன் மரணத்தின் பிடியில் இருக்கிறான்.மரணம் எனும் அந்த குழந்தை,மனிதன் எனும் இந்த பொம்மையை வைத்து சலிக்கும் வரை விளையாடி விட்ட பின் வீசி எறிந்து உடைக்கின்றது.
ஆனாலும் மரணத்தைப் பற்றிய புரிதலில் மனிதன் சிறு குழந்தையின் நிலையில் தான் இருக்கிறான்.மரணத்தின் ஆளுமையை அவன் உணரும் தருணங்கள் மிக குறைவே.சமூகம் என்னும் மனிதக் கடலில் ஒரு துளியாக விளங்கும் ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் தன் நெருங்கிய,அயல் உறவுகளும்,தான் பழகிய மனிதர்களும்,அண்டை வீட்டினரும் என்று வகைப்பட்ட மனித உயிர்கள் இறக்கும் போது அதன் ஆளுமையை புரிந்து வியக்கிறான்.புரிந்து கொள்ள முயல்கிறான்.பீதி அடைந்து வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்கிறான்.ஆனால் இந்த உணர்வு அந்த மரண நிகழ்வின் போதும் அதன் பிறகு அந்த மரணத்தின் நிமித்தமாக செய்யும் காரியங்களின் போதும் மட்டுமே மனிதனிடம் தங்குகிறது.பிறகு வாழ்வின் நிலையற்ற தன்மையை மறந்து தனக்காக,புலன்களால் செலுத்தப்பட்டு கீழ்நிலை இன்பத்திலே நிலை கொள்கிறான்.
தன் வாழ்வின் முழு அதிகாரமும் தன்னிடம் இல்லை என்பதை மறந்து வாழும் வாழ்க்கையே சராசரி மனிதனின் வாழ்க்கையாக அமைந்து விடுகிறது.கனவுகளும் அதன் பயன்களும்,புலன்களின் இன்பங்களுமே அந்த வாழ்க்கையின் அம்சங்களாக முந்தி நிற்கின்றன.தான் மரணத்தை நோக்கிப் பயனிக்கிறோம் என்பது ஒரு மரண நிகழ்வின் போது மட்டுமே அவன் மனதில் வந்து மறைகிறது.அவன் வாழ்வின் எச்சங்களாக எஞ்சி நிற்பவை காமம்,அச்சம்,குரோதம்,பொறாமை.அவன் வாழ்வு முழுதும் தனக்காக தன் ஆசைகளின் விளைவுகளையே முன்னிறுத்தி ஓடுகிறான்.
தன் வட்டத்துக்குள்ளேயே வாழ விரும்பும்,தன் ஆசைகளையே தீர்த்துக் கொள்ள வாழும் வாழ்க்கை மரணத்தோடு பழகும் போது,அதனோடு அந்நியோன்யம் கொள்ளும் போது,அதனையே நினைத்து வாழும் போது விலகிச் சென்று விடும்.மரணத்தின் நித்தியத்தையும்,அதன் ஆளுமையையும் புரிந்து கொள்ளும் போது மட்டுமே இந்த சமூகத்தின் பிரச்சனைகள் தீரும்.சூன்யத்தில் நிலைக்கும் இன்பத்தை மனிதன் உண்ர்ந்து வாழ வேண்டும்.மரணத்தோடு காதல் கொண்டு அது தரும் சுகத்தில் நிலைக்க முயலும் போது,மனித வாழ்க்கை ஒரு புதிய பரிமாணம் கொள்ளும்.மரணமே..நீ வாழ்க!!!

Saturday, March 7, 2009

State of Being Woman

Today is March 8 and celebrated as International Women's Day around the World.I whole heartedly wish every women in this world on this day.The humankind evolved from woman and Lucy called as the mother of man is the serving proof for this fact.And the Gods who takes on the process of evolution,preservation and dissolution(Brahma,Vishnu & Shiva)are indeed controlled by Shakthi-The belief is that Shakthi is the mother of Gods and hence called as Adhi Sakthi. Incidentally Shakthi in English is ENERGY which prevails everywhere and forms the base for
the whole actions in the cosmos and inseperable constituent of everything.Einstein,with his famous equation,declared the importance of energy to this whole world.In this context,Shakthi-Energy,assigned to the woman form,indicates the importance and supremity of women.They are the one to be celebrated.They are the one to be respected.In every man's life women occupies important spaces in different forms.
Despite all these qualities the social rights they possess are still not to the extent they desrve.For centuries,they are stopped from enjoying their rights and treated as only objects giving pleasure to men.They are treated a step down from Men.It is always women are targeted whenever someone talks about cultural degradation.Recent Bangalore Pub attacks are one of such incidents.For centuries they are stopped from enjoying their rights and domestic voilence,sexual harrasments are more on them.
Let us together change these social and domestic inequalities and give them all their rights they deserve.Let us celebrate them.Let us respect them.Let us give them equal rights in this society and Let them come out of their unreasonable boundaries to explore.Wish them all the best.
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்"

Friday, March 6, 2009

Desire or Destiny?


I have just watched this movie "SAMSARA" and have been thinking about this for the past couple of days..What controls my life?Desire or Destiny?If desire is what controls and decides my life then I presume that FREE WILL exists.But does it really exist?Can I do or get what I want?If yes,then destiny fails unless the destiny itself gives it to me.Otherwise,no place for destiny and no one than myself has control on my life.But apparently this seems to be false.There is something eternal which decides what I get and what I dont.Isn't it Destiny?

It looks to be so simple to conclude that Destiny is what controls my life.But a subtle view may raise many questions.To put it simple,if I intend to become an Astronomer and study for it hardly but ends up with no opportunities and so change my career owing to circumstances and become a successfull lecturer.May be at my old age,when I know I am going to die,I should convince myself that my destiny is to die as a lecturer.But what would have happened if I never gave up my desire to become an astronomer and strived for it.Probabilities are,I would have became an astronomer or never became so and died as an ordinary man(not becoming a lecturer).My life would have been totally different and here it seems desires has a significant control over destiny.And to an extent,desire decides destiny.

Simultaneously I can argue like this too.My desire to give up becoming an astronomer and become a lecturer is itself my Destiny.In simple,that I should give up my desire and pursuea different career is itself the Destiny.In this sense,Destiny clearly takes entire control over desire.
Destiny being eternal is really hard to interpret the absolute meaning of this term.Since desire arises inside me,from my mind it becomes easier for me to percieve it.And hence I am trying to conclude that Destiny has control over Desire.