Sunday, June 19, 2011

அவன் இவன் – மரணத்தின் துயரமும்,துயரத்தின் இரக்கமின்மையும்

விளிம்பு நிலை மனிதர்கள்,இயல்பு மீறிய மனிதர்கள்,மனப்பிறழ்வும்,சமூக வாழ்வின் ஒழுங்கின்மையும்,உறவுகளின் சூன்ய தன்மைகள்,இருப்பின் கொடூரமும்,அவலமும்,வதையும் என வாழ்வின் இருத்தலியல் துயரங்களை தனது படைப்புகள் மூலமாக விவாதிக்கும் ஒரு படைப்பாளியின் புதிய படைப்பு.படத்தின் இறுதி காட்சிகளில் தன்னுடைய சமூகம் மீதான கோபத்தையும்,மரணத்தின் கொடூரத்தையும் வெளிப்படுத்தி இதயத்தில் ஒரு அழுத்தத்தையும்,ஆன்மாவில் கதறலையும் ஏற்படுத்தி விட்டார்.அந்த இறுதி காட்சிகள்.....ஒரு மனிதனுக்கு மரணம் என்பது எவ்வளவு அழுத்தமானது என்பதையும்,அதன் கொடூரமான அவஸ்த்தையையும் இவ்வளவு அழுத்தமாக வெளிப்படுத்த முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.