Thursday, July 28, 2011

மற்றும் அனைத்து ஆன்மாக்களையும்

மற்றும் அனைத்து ஆன்மாக்களையும்
படைத்த இறைவனே
இந்த ஆன்மாவையும் படைத்தான்

ஆனாலும்
இந்த ஆன்மா மட்டும்
உன்னதமானதாக உருப்பெற்றது
படைப்பின் புரியாத ரகசியமே

மற்ற ஆன்மாக்கள்
மற்ற ஆன்மாக்களை கற்பழித்த போது
மற்ற ஆன்மாக்கள்
மற்ற ஆன்மாக்களை காயடித்த போது
இந்த ஆன்மா மட்டும் கசிந்தது

மற்ற ஆன்மாக்கள் பசித்திருந்தபோது
மற்ற ஆன்மாக்கள் மரணித்தபோது
இந்த ஆன்மா மட்டும் கசிந்தது

இந்த ஆன்மா
இதனாலலேயே
இறைவனின் இருப்பு மேல்
ஐயம் கொண்டது

இறைவனை விமர்சிக்க ஆரம்பித்தது
இறைவனை இல்லை என்றது

மற்றும் கூடின மற்ற ஆன்மாக்கள்
இந்த உன்னத ஆன்மாவையை விமர்சிக்க
இருப்பை இல்லாமலாக்க
நிர்வானபடுத்த
கொட்டைகளை அறுக்க
குறியை நெருப்பில் காய்ச்ச

இறந்தது உன்னத ஆன்மா நிர்வாணத்தில்

விழித்து எழுந்தது இறைவனின் மடியில்

கேள்வி:
உன்னத ஆன்மாவை சிதைக்க??????
உன்னத ஆன்மாவை வதைக்க?????
ஏன் மற்றும் சில ஆன்மாவை படைத்தீர்????

பதில்:
இறைவனாகிய நான்
ஆன்மாவை படைத்தேன் 
வதைகள் இல்லை
வாதைகள் இல்லை

ஆன்மாக்களாகிய நீங்கள்
இறைவனை படைத்தீர்கள்
வதைகள் உண்டு
வாதைகள் உண்டு



Wednesday, July 13, 2011

உன்னுடன் ஆன என்னுடைய உறவு

உன்னுடன் ஆன என்னுடைய உறவு ஒரு சூரிய ஒளி புக முடியாமல் சிறு சிறு கோடுகளாக விழுந்து கொண்டிருக்கும் அடர்ந்த கானகத்தில் பிரமிப்போடு நிற்கும் மனிதனைப் போல உள்ளது.அருவிகளின் பேரிரைச்சலும்,விலங்குகளின் ஓலமும்,பறவைகளின் சப்தமும்,பூச்சிகளின் இடைவிடாத காதுகளை வலிக்கச் செய்யும் சப்தமும்,அலறலும் என மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.வெற்றுடம்போடு நின்று கொண்டிருக்கும் என்னுடைய மார்பில் குளிர் காற்று நெருஞ்சி முட்களைப் போல அவஸ்தையை ஏற்படுத்துகிறது.முதுகெலும்பின் வழியே ஒரு சில்லிப்பு பரவி பின் கழுத்தில் இம்சை கொடுக்கிறது.இலைகளின் வாசமும்,நான் நின்று கொண்டிருக்கும் ஈர சேற்றைப் போன்ற மணலின் வாசமும்,மரப் பட்டைகளின் ஈரமும் இதயத்திலும் நுரையீரலிலும் பரவி என் சுவாசத்தின் வழியே வெளியேறி இந்த காட்டையே உஷ்ணப்படுத்துகிறது.இந்த அச்சம்,பரவசம்,பிரமிப்பு,உடல் வாதை,சுவாசத்தில் சுகம்,இம்சை,அவஸ்தை--இவை அனைத்தும் தான் உன்னுடன் ஆன என்னுடைய உறவு