Wednesday, July 13, 2011

உன்னுடன் ஆன என்னுடைய உறவு

உன்னுடன் ஆன என்னுடைய உறவு ஒரு சூரிய ஒளி புக முடியாமல் சிறு சிறு கோடுகளாக விழுந்து கொண்டிருக்கும் அடர்ந்த கானகத்தில் பிரமிப்போடு நிற்கும் மனிதனைப் போல உள்ளது.அருவிகளின் பேரிரைச்சலும்,விலங்குகளின் ஓலமும்,பறவைகளின் சப்தமும்,பூச்சிகளின் இடைவிடாத காதுகளை வலிக்கச் செய்யும் சப்தமும்,அலறலும் என மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.வெற்றுடம்போடு நின்று கொண்டிருக்கும் என்னுடைய மார்பில் குளிர் காற்று நெருஞ்சி முட்களைப் போல அவஸ்தையை ஏற்படுத்துகிறது.முதுகெலும்பின் வழியே ஒரு சில்லிப்பு பரவி பின் கழுத்தில் இம்சை கொடுக்கிறது.இலைகளின் வாசமும்,நான் நின்று கொண்டிருக்கும் ஈர சேற்றைப் போன்ற மணலின் வாசமும்,மரப் பட்டைகளின் ஈரமும் இதயத்திலும் நுரையீரலிலும் பரவி என் சுவாசத்தின் வழியே வெளியேறி இந்த காட்டையே உஷ்ணப்படுத்துகிறது.இந்த அச்சம்,பரவசம்,பிரமிப்பு,உடல் வாதை,சுவாசத்தில் சுகம்,இம்சை,அவஸ்தை--இவை அனைத்தும் தான் உன்னுடன் ஆன என்னுடைய உறவு

No comments: