Monday, February 8, 2010

மரம் விற்பவள்

விற்பவள்
நேற்றுப் பெருமழை பெய்தது

அமைதியான இருள் வெளியில்
காற்றைக் கிழித்து கத்தும் நாய்கள்
என் மரணத்தின் வருகையை மொழிகின்றன

இருள் தின்ற வெளிச்சத்தில்
நிதானமற்று ஓடுகின்ற
கரப்பான் பூச்சி போல
என் மனம் பதறி ஓடுகிறது
மரணத்தை நோக்கி

நனைந்து நிற்கும் மரமும்
அழுகிறது எனக்காக
இலையின் வழியில் நீர் சொட்டி

என்னோடு பிறந்தது
என்னோடு வளர்ந்தது
என்னோடு வாழ்ந்தது
என்னோடு தேய்ந்தது
இந்த மரம்

யாரும் வரவில்லை
என்னிடமும் மரததிடமும்
பூக்கள் பூக்கும் வரை

பிறகு வந்தன
சில மனிதர்களும்
பல விலங்குகளும்
தேடுதல் முடித்து தொலைந்தன

தேடியவர்களின்
அடையாளங்களை சுமக்கிறோம்
பெயர்களை மரமும்
பல் நக கீறல்களை நானும்

நாளடைவில் நாற்றமடிதோம்
மூத்திர நாற்றம் மரத்துக்கு
எச்சில் நாற்றம் எனக்கு

மௌன மொழியில் கலந்தோம்
நானும் மரமும்
நான் புணர்ந்தேன் மரத்தை
மரம் புணர்ந்தது என்னை

புணர்வின் சுக வழியை
மரத்திடம் மட்டும் உணர்ந்தேன்

போகிறேன் தோழனே
உயிரற்று இறக்கிறேன்

வாங்குபவன்
நேற்றும் பெருமழை பெய்தது
விலைமகள் இறந்தால்
அவள் வீட்டு மரமும்
பெருங்காற்றில் வீழ்ந்து போனது
அதைக் கொண்டு எரித்தனர்
அவள் பிணத்தை


3 comments:

karthik said...

Good One

www.bogy.in said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...
This comment has been removed by a blog administrator.