Sunday, November 6, 2011

மாலை நேரம்

சலனமில்லாத மாலை நேரம்.ஒரு துளி மேகத்தைக் கூட வானத்தில் காண முடியவில்லை.கண்ணுக்கு எட்டுகிற தூரம் வரை ஒரு கட்டிடமும்,மனிதர்களும் இல்லை.ஆங்காங்கே ஓரிரு மரங்கள் காட்சிக்கு தெரிகின்றன.ஆனால் அதன் ஒரு இலையைக் கூட காற்று அசைக்கவில்லை.ஒரு புகைப்படம் போலதான் காட்சி கண்களுக்கு தெரிகின்றது.என் முதுகுக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருக்கிறான்.ஒருவிதமான மங்கலான மஞ்சள் வெளியில் சிறு சிறு துகள்கள் புழுதியாக காட்சி கண்களின் வழியே மனதிலும் மூளையிலும் பதிந்து கொண்டிருக்கிறது.இருளும் அமைதியும் காட்சிகளாக மாறப் போகும் தருணத்திற்காக மனம் காத்துக் கிடக்கிறது.ஒரு விதமான அழுத்தம் மனமெங்கும் வியாபிக்க ஆரம்பிக்கிறது....

வாழ்க்கையைப் பற்றின நினைவுகளும்,அச்சமும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.