Sunday, August 14, 2011

நூற்றாண்டுகளின் பசி - சாருவின் தேகம் நாவலிலிருந்து

இந்த கவிதை சாருவின் தேகம் நாவலிலிருந்து நான் என் மெய் சிலிர்த்து,உள் மனம் நடுங்கி,ஆன்மா அதிர்ந்து,என் சிறு அறிவால் விவரிக்க முடியாத உணர்வுகளோடு படித்த...படிக்கின்ற...படிக்க போகும் கவிதை.

I do not know if I am breaching any copyright issue here...or may be Charu himself might sue me for publishing his writing in my blog without his permission.But I am publishing this to make all people understand how important it is to celebrate our own writers.

நூற்றாண்டுகளின் பசி

இரைக்காகக்
காத்துக்கொண்டிருக்கும்
வனமிருகம் நான்

நூற்றாண்டுகளின் பசி
என் தேகமெங்கும் தீயாய்
கனன்று கொண்டிருக்கிறது
இரவும் பகலும்
பருவ காலங்களும்
வந்து போகின்றன
என் மௌன உறுமலில்
வனவிருட்சங்கள்
நடுக்கமுற்று சிலிர்க்க
பட்சிகள் ஓலமிடுகின்றன
என் இரை
என்னை நோக்கி
வந்துகொண்டிருப்பது
எனக்குத் தெரியும்
இரையின்
மாமிச வாடை
நாசியைத் துளைக்கிறது
இரையே
விரைந்து வா
உன் குரல்வளையில்
என் பற்கள் பதியும் போது
உன் கண்களில் தெரியும்
பீதியும் உயிர்த்தாபமும்
கண்டு நான்
பரவசம்
கொள்ள வேண்டும்
உன் குருதி நக்கி
என் விடாய் தீர வேண்டும்
உன் மாமிச ருசியின்
ஞாபகம் கொண்டு
வணதேவதைகளிடமும்
விருட்சங்களிடமும்
புலம்புகின்றேன்
அதைக் கேட்டு
வனதேவதைகளில் ஒன்று
சொன்னது நான்தான் உன்
இரையென
உன் மாமிச வாடையறிந்த
எனக்கா தெரியாது
தேவதைகளின் தந்திரம்
அவ்விடம் அகன்று
மலையடிவாரம் வந்தேன்
நட்சத்திரங்களுக்குக் கதை
சொல்லிக்கொண்டிருந்த
ஆதிக்கிழவியொருத்தி
என்னை நிறுத்தி
என் முன் ஜென்மத்து
ஞாபகப் படுக்கையில்
கிடத்தினாள்
கடும்பாலையில்
தனிமை கொண்டிருக்கும்
சர்ப்பம்
வானிலிருந்து வீழுமொரு
தாரகை
செம்பருத்தி மலர்
எருமையின் முதுகுப் புண்ணில்
நெளியும் புழு
தர்மனைத் தொடரும் நாய்
தீர்கதரிசியை முத்தமிட்டுக்
காட்டிக் கொடுப்பவன்
மகனால் ஆண்குறி அறுத்தெரியப்பட்டுக்
கதறும் ஓரணோஸ்
ராணி புணர்ந்த புரவி
ஆணை அடித்த பாகன்
சமரிலே புறமுதுகிட்டு ஓடும்
படைவீரன்
கலவியறியாத நிதம்பம்
உறங்கியறியாத அக்கினி
பெயர் அறியாத பித்தனென
எத்தனைஎத்தனையோ
கண்டு வீறிட்டலறி
ஞாபக இரைச்சல்
துரத்தி வர
மாறுவேடம் பூண்டு
வனத்தின் இருளில்
கரையலானேன்
இரையே
என்னை அடையாளம்
கண்டு கொள்
என் மனம் சுவாசித்து...